உன் கன்ன
இந்த மார்கழி பனிக்காலத்தில்
அதிகாலை நேரத்தில்
இரு சக்கர வாகனத்தில்
நீ வீதிவழியே பறக்கும்போது
உன் கன்ன கதுப்புகளில் புரண்டு,
காது மடல்களை தழுவி,
கொஞ்சி குலாவி,
மூச்சு முட்ட வைக்கும்
சுருண்ட கூந்தல்
எத்தனை புண்ணியம் பண்ணியது??