காதல் நமக்கு ராஜாங்கம்
குறுநகை வழிந்தோடும் உன் குவளைக்கண்
எதைத்தேடும் என்பதை நானறிவேன்,
கரும்புப்பார்வை ஒன்றைத்தானே என்னிடமிருந்து.
காந்தல் எனக்குள் வேனில் வீசும்
சாந்தம் என்னுள் பாய்ச்சி சரிக்கட்டுகிறாய்,
முரட்டு சுபாவத்தையும் முட்டுக்கொடுத்து
தள்ளி நிற்கிறேன், முன்கோபி நானல்ல,
முன்னே வா, வந்து என் பின்னே வா.
ராஜாங்கம் நமக்காக இனித்தான் காத்திருக்கிறது..!