ஒரு கோப்பை நஞ்சு
"அவர் சொன்னார்,
இவர் சொன்னாரென்று எதையும்
சிந்திக்காமல்,
அப்படியே ஏற்காதே.
ஏன்?,
எதற்காக?,
எப்படி?
என்னும்
வினாக்களை
எழுப்பி
உண்மையை
உணர்ந்துக்கொள்.
உனக்குள் உன்னையே நீ எண்ணிப்பார். ",
எனச் சிந்தனைக்கு
வழிவகுத்த
அறிஞன்
சாக்ரடீசுக்கு
ஏதென்ஸ் அரசு
அளித்த
பரிசு...............
ஒரு கோப்பை நஞ்சு!....
அதையும் இன்முகத்தோடு,
கையில் வாங்கி,
கண் கலங்காமல் அருந்தி,
மரணத்தையே
முத்தமிட்டார்,
தத்துவ ஞானியான
சாக்ரடீசு!.....