சுடுகாட்டுத் தரை

சமபந்தி போஜனமும் கிடைக்கப் பெறா
உலகின் சமம் கிடைக்கும் இடம் !

மிதிபட்டு மதி கானா மதியிழந்து
தவிக்கும் பூக்குறள் கொண்ட தாழி !

சொற் பூண்டு எடுத்துரைத்தும் மலர்சாந்து
பரிமாறியும் காயும் இந்த பாலை வானம் !

எவ்வழி சென்றோ அவ்வழி திரும்பும்
மகிமை இந்த இடத்திற்கு உண்டு !

மனித பரவல் கழிந்தோடியும் கழிவுக்
காதல்கள் கூறியோடியும் படித்தெழுந்த
படிந்த கரை கொண்ட சகதி !

நடுநிசி குழந்தைகளும் குழந்தைகள் நடுநிசியிலும்
அழுது புலம்பும் இசைத்தாயின் மடியில் !
யாரும் கானா அறியா வண்ணம் !

ஊன் உணவு கொண்டு செல்ல பயம் காணும்
காதுகளும் கண்டு இங்கு உண்டு !

நிலவுக்கு காரியுண்டு
கடலுக்கும் கறையுண்டு
எங்களுக்கும் கரையுண்டு கறையும் உண்டு !

எழுதியவர் : வேல்முருகானந்தன் (30-Dec-16, 7:44 am)
பார்வை : 108

மேலே