சுடுகாட்டுத் தரை
சமபந்தி போஜனமும் கிடைக்கப் பெறா
உலகின் சமம் கிடைக்கும் இடம் !
மிதிபட்டு மதி கானா மதியிழந்து
தவிக்கும் பூக்குறள் கொண்ட தாழி !
சொற் பூண்டு எடுத்துரைத்தும் மலர்சாந்து
பரிமாறியும் காயும் இந்த பாலை வானம் !
எவ்வழி சென்றோ அவ்வழி திரும்பும்
மகிமை இந்த இடத்திற்கு உண்டு !
மனித பரவல் கழிந்தோடியும் கழிவுக்
காதல்கள் கூறியோடியும் படித்தெழுந்த
படிந்த கரை கொண்ட சகதி !
நடுநிசி குழந்தைகளும் குழந்தைகள் நடுநிசியிலும்
அழுது புலம்பும் இசைத்தாயின் மடியில் !
யாரும் கானா அறியா வண்ணம் !
ஊன் உணவு கொண்டு செல்ல பயம் காணும்
காதுகளும் கண்டு இங்கு உண்டு !
நிலவுக்கு காரியுண்டு
கடலுக்கும் கறையுண்டு
எங்களுக்கும் கரையுண்டு கறையும் உண்டு !