போட்டியென வந்துவிட்டால்

போட்டியென வந்துவிட்டால் பொங்கி நின்று
***புறமுதுகு காட்டாமல் பாய வேண்டும் !
ஆட்டமதில் தோற்றாலும் அமைதி காத்து
***அடுத்தடுத்து வெற்றிக்கு முயலல் வேண்டும் !
நாட்டமுடன் செயல்பட்டால் நன்மை கிட்டும்
***நல்லறமே நிச்சயமாய் வாகை சூடும் !
வாட்டமுடன் சோர்ந்துவிட்டால் வாக்கும் கெட்டு
***வையகத்தில் வெறுப்பேதான் மிஞ்சும் நெஞ்சே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Dec-16, 8:00 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 51

மேலே