மரியாதை - ஒருவிகற்ப அந்தாதி இன்னிசை வெண்பாக்கள்

உழவருக்கு நாளும் உணர்ந்திடுவாய் நாமும்
மழலையுடன் மக்கள் மரியாதை தந்தே
அழகான பொங்கலையும் ஆசையுடன் என்றும்
கழனிமேட்டில் வைத்திடுவோம் கண் .


கண்ணில் மரியாதை காட்டும் விவசாயி
மண்ணில் பெருமைதனை மங்காது செய்கின்றார்
விண்ணில் மழைநீராம் விந்தை உலகாளும்
திண்ணம் இதுவன்றோ தீர்வு .


தீர்வாக வேளாண்மை தீண்டிடுமாம் நாட்டினிலும்
பார்மிசை சோறுண்டாம் பக்குவமாய் நாள்தோறும்
சீர்மிகும் மேதினியில் சிந்தையை வாழ்த்திடுவோம்
ஊர்மிசை உண்டாம் உழைப்பு .


உழைப்பு தருமாம் உயர்வை நமக்கு
பிழைப்பும் திருவாகும் பின்னர் தரிசும்
தழைத்தோங்கும் வாழ்க்கை தரமாகும் நல்ல
மழையும் பொழிந்திடும் மண் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Jan-17, 5:05 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 71

மேலே