மின்னிடும் கண்கள்

உன்கண்கள் பேசுகின்ற
ஊர்தனிலே நானிருப்பேன்
பன்மொழிகள் காட்டுகின்றாய் !
பாங்குடனே உன்னழகில் .
கன்னியுந்தன் காதலினால்
காண்கின்ற காட்சியினால்
என்மொழிகள் மறந்திடுதே !
என்செய்வேன் சொல்லிடுவாய் .
மின்னுகின்ற கண்களினால்
மின்சாரம் பாய்ச்சுகின்றாய்!!!!



முன்னுரையைச் சொல்லியுமே
முத்தான புன்னகையால்
நன்னெறிகள் ஊட்டுகின்றாய்
நாளுமுனைப் பாடுகின்றேன்
உன்னதமாய் இவ்வுலகில்
உள்ளவளே ! நீவாழ்க !
வன்முறைகள் வேண்டாமே !
வாசமுள்ள காதலிலே!
என்னருகே வந்திடுவாய் !
என்னுயிரும் நீயன்றோ !!!!


உன்றனையே நினைத்திட்டேன்
உள்ளன்போடு காதலித்தேன்.
என்றனையே மறந்திட்டேன்
எத்திக்கும் உன்நினைவே .!
சென்றயிடம் சொல்லிடுவாய்
சேர்ந்திடுவேன் உன்னுடனே!
வென்றிடுவோம் காதலிலே .
வெற்றிகளும் கிட்டிடுமே!
மின்னுகின்ற கண்விழிகள்
மீனாகித் துடிக்கிறதே !!!!!!

மொத்த சொற்கள் :- 60
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Jan-17, 12:48 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 84

மேலே