அரசியல் வேஷம்
வஞ்சகமாய் பேசி வாய்ஜாலம் காட்டி
நெஞ்சகமே அருவருக்கும் பொய்களை எல்லாம்
புறமுதுகில் பொதியாய் சுமந்து -
தேர்தல் காலத்தில் தெருதெருவாய்
பயணிக்கும் வேட்பாளர் உள்ளங்களே !!!!!!!!!!!!!
மரமென்றும் இல்லையென்றும்
மாற்று இடம் பலவென்றும்
இருக்கின்ற இடத்திற்கு ஏற்றாற்போல் நிறம்மாறும் -
பச்சோந்தி இனம்கூட பதுங்குதய்யா
உங்களை பார்த்து !!!!!!!!!!!!!!
மொழி என்பீர் இனம் என்பீர்- மூச்சும் என்பீர்
முழு பொய்யை மறைத்து நீர் உண்மை என்பீர்
ஏழை விதியோடு விளையாடி ஒட்டு வாங்கி
எங்கோயோ இடம் தேடி மறந்தே போவீர் !!!!!!!
நீர் பாய்ச்சி நிலம் உழுது
நீண்டு வளரும் பயிரெல்லாம்
நீரின்றி நிலம்வெடித்து பசுமை மாறி போகையிலே-
நெஞ்சுவெடித்து மாண்டுபோன ஏழை உயிர் அலட்சியமோ ?
காலம் எல்லாம் உழைத்து கூட
கால்காசு மிஞ்சாமல்
ஏழைவீட்டை கடன் காசு
ஏலம் விட்டே கொல்லுதய்யா !!!!!!!!!
கைகூப்பி ஒட்டுக்கேட்ட கைநாட்டு அமைச்சரெல்லாம்
கந்து வட்டி காசுசேர்த்து கல்லாவை நிரப்பையிலே
ஓடி ஓடி உழைத்துவந்த உழவர்கள் வம்சமெல்லாம்
ஓட்டாண்டி ஆனதுதான் உங்களோட சாதனையோ ?