ஆமினாவும்ஐம்பது வாரியலடியும்

*ஆமினாவும் ஐம்பது வாரியலடியும்*
____________________________________

"ஆமினா..வா.. இப்படி.."

"யாரையும்.. நம்பமுடியாதுப்பா "

"எனக்கு அப்பவே... தெரியும்"
"முண்டையிலவோ... எல்லாம் டிவி பாத்துத்தான் கெட்டழியுறாளுவ"

"மார்க்கம் தெரியாம வளத்த தாய்க்காரிய சாத்தனும்"

"புள்ளையா வளர்த்திருக்கா..
தாய் புத்தி..தானே.. வரும்"
இது.. இரண்டு வயசில் மகளின்
எதிர்காலத்தை.. மிதித்து..
தலாக்கு சொல்லி காணமல் போயிருந்த
ஆமினாவின் தந்தையின் திருமொழி..

பள்ளிவாசல் திண்ணையில
சிதறிக்கிடந்தன
ஜமாத்தின் வாய்கள்..

அத்தனைகண்களும்.
காஜியார் தீர்ப்புக்கு..
காத்துக்கிடந்தன..
அஸ்கரையும் ஆமினாவையும்
கையும் களவுமா..
பிடிச்ச சாகச கதைய..
விவரித்தபடி..நின்றான்
எதிர்வீட்டு..சும்சு.
.
முகம் வீங்கி சிவந்தபடி
மூலையில். அஸ்கர்

இத்தனைக்கும் இடையில்..
ஆயிரம் ருபாய் அபராதமும்
இரண்டு.வாரியல் குச்சியால
ஐம்பது அடியுமாக..
காஜியார் தீர்ப்பு..
விமர்சனமானது..

"இது ஒரு தீர்ப்பா.. அதுக்கு
கூட்டிக் கொடுங்கய்யா.."
ஏகத்துவம் பேசும்.. இன்னொரு ஜமாத்
காறி உமிழ்ந்தது

காஜியாருக்கோ. ஆமினாவின் தாயின்
கண்ணீர் மட்டுமே தெரிந்தது..

இத்தனைக்கும் மத்தியில்...

ஆமினாவிற்கோ...

அஸ்கரை வரைந்த படத்திற்கு
வண்ணம் தீட்டி அவனிடம் இனி்
எப்படி கொடுப்பதென்பதே
பெருங்கவலையாக இருந்தது....

எழுதியவர் : சிந்தா (14-Jan-17, 9:04 am)
சேர்த்தது : sindha
பார்வை : 62

மேலே