காதல் விதை

என்றோ என் மனதில் நீ விதைத்த காதல் விதை இன்று வேர்விட்டு துளிர்க்க ஆரம்பித்து விட்டது
என் கண்ணீரின் ஈரம் பட்டதால்.
உயிரை உரமாக்கி வேருக்கு வழுசேர்த்தேன்,
துளிர்கள் துளிர்க்க காதல் இலைகள் வெடித்து வெளி வந்தது.
நினைவெனும் காலம் கடந்து நம் காதல் செடி வளர்ந்து நிற்கிறது,
முதல் பூ மலர்ந்து உன் வாசலை தேடி வாசனை அனுப்பியது.
விதைக்க தெரிந்து, மலர்ந்த காதலை பரிக்க மனமில்லையோ உமக்கு.
விரைந்து வா, என் காதல் மலர்கள் வாடி சருகாவதற்குள்.

எழுதியவர் : தமிழ் ப்ரியா (7-Feb-17, 11:53 am)
Tanglish : kaadhal vaithai
பார்வை : 325

மேலே