இறப்பு
நகைச்சுவையா நகைத்தாயே இன்று மௌனத்தால் எங்களை வதைத்தாயே.....!
கை தட்டி நகைத்த கைக்கும் ஓர் பூட்டு...!
நீ எட்டிய தூரமும் உன்னை எட்டிபார்க்கின்றது எட்டாத தூரத்தை எட்ட வருவாயா என்று.....!
பணத்தை நோக்கி சென்ற உனக்கு சில்லறை தானே மிஞ்சியது அதுவும் சில மணி நேரம்தானே மிஞ்சியது....!
நீ வாழ்ந்த காலத்தில் எங்களுக்கு சுகம் அளித்தாயோ என்று தெரியவில்லை ஆனால் நீ இறந்த காலத்தில் சோகத்தை அளித்துவிட்டாய்....!
முகர்ந்து பார்க்கும் மூச்சு காற்றும் நின்றது
மூன்று ஊது பத்தியோ ஏற்றியிருந்தது....!
உன் அசைபோடா வாயிற்க்கும் வெற்றிலை பாக்கு கையில் கொடுத்து வேதனையோடு அழுதோமே.....!
கேக்காத காதுக்கும் தேனாட்டும் இனிக்கும் தப்பு சத்தம் ஒலித்ததே....!
மரணத்தை எய்தி மண்ணுக்குள் விதையாகினாயே மானிடா....!