எனக்கும் மன நிலை பாதிப்பு
முக நூலில் உன் முகம் கண்டு
முத்தங்கள் பல கொடுத்து
முடித்தாள் உன்னையே மணம்
முடிக்க வேண்டும் என நினைத்து
குறுந்தகவல் நான் அனுப்பி
உனக்காக வலை விரித்தேன்
மங்கலமாய் வாழ நான் ஆசைப்பட்டு
மனதார காதலித்தேன் உன்னை நான்
மணவறையில் கூட என்
மனதிற்கு தெரியவில்லை.
நீ மன நல பாதிக்க பட்டு இருப்பது
எனக்கு தெரியாமல் போனது..
மனைவியாய் உன்னை நான்
கரம் பிடித்து இப்போது உணர்கிறேன்
உன்னால் நானும் மன நிலை
பாதிக்க பட்டு இருக்கிறேன் என்பதை..
இப்போது நான் ஜல்லி கட்டு காளையாய்
எத்திசை நோக்கி போவது தெரியவில்லை.