காதலர் தினம்

வாழ்க்கையில் நாம் கடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் வாழ்வதற்கே.அதில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரேயொரு மணித்துளியினை மட்டும் நிறுத்தி நினைத்துப் பாருங்கள்....

நாம் அனைவரும் உயிர்ப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா இல்லை உயிர்ப்பற்றதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என...

அனைவருமே இன்று இயந்திரத்தனத்தோடே இயங்கிக் கொண்டிருக்கிறோம்.அதில் அன்பு எனும் தேனை ஒவ்வொரு மணித்துளிகளிலும் கலந்து பாருங்கள் வாழ்க்கை மிகவும் அழகானதாய் மாறிவிடும்...

நாம் வாழ்கின்ற வாழ்க்கை மிகவும் குறுகியது அதற்குள் போட்டி, பொறாமைகள்,சண்டைகள் விடுத்து அனைவரையும் அன்பால் அரவணைத்திடுங்கள்...

கவிதை எழுத காதலில் வீழ்ந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.அது போல் காதலிக்க காதலர்களாக இருக்க வேண்டியதுமில்லை...

உங்களை சுற்றியுள்ள அனைத்தையும் காதலியுங்கள்...
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அன்பை அனைவருக்கும் அள்ளிக் கொடுங்கள்...
என்றாவது ஓர் நாள் நீங்கள் கொடுத்த அன்பு மொத்தமும் உங்களுக்காகவே உங்களைத் தேடி வரும் அன்று அன்பு மழையில் நனைந்து திக்குமுக்காடிப் போவீர்கள்...

காதலைத் தேடி நீங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை...
காதலை உங்களைத் தேடி வரவழையுங்கள்...
நகரும் ஒவ்வொரு தினமும் காதலர் தினம் தான்..

❤️HAPPY VALENTINES DAY FRIENDS❤️

எழுதியவர் : அன்புடன் சகி (14-Feb-17, 12:12 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 394

மேலே