நானே சொல்கிறேன்

உன்னை பிடிக்கவில்லை என்று
பலமுறை சொல்லிப்பார்த்தும்
பாழும் மன மேற்கவில்லை
ஆச்சரியம் ஆனால் உண்மை
என் பொய்யில் கலப்படம்
கண்டது என் கண்களே
உதடுகள் வேண்டாமென்று சொல்ல
கண்களோ காததில் மிதந்தது
தோல்வியில் இன்புற்றேன்
உன்னை கண்டேன்
என்னை தொலைத்தேன்
விதையாய் உன் பெயர்
பாழ்மனதில் பதிய
வேர்கள் வளர்ந்து
காதல் தழைத்தது
நாணம் மறந்து
நானே சொல்கிறேன்
உன்னை காதலிக்கிறேன்
கரம்பற்ற காத்திருக்கிறேன்
காலம் சேர்க்கட்டும்
நாளை தம்பதிகளாக

எழுதியவர் : அருண்மொழி (14-Feb-17, 2:58 pm)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : naaney solgiren
பார்வை : 118

மேலே