சின்னப்பா-கிட்டப்பா ஒரு கற்பனையோ உரையாடல்

இது ஒரு கற்பனை உரையாடல்
(மாஜி முதல் மந்திரி சின்னப்பா
சொத்து குவிப்பு கேஸ் ல் சிறை
தண்டனை விதிக்கப்பட , ௮ வருடம்
தேர்தலில் நிக்க இயலாதவராய் ஆக,
சிறைச்செல்லும் முன் தன சகாக்களை
சந்திக்கிறார் , அப்போது அவர்க்கும்
அவருடைய கட்சி எம்.எல்.எ ஒருவருக்கும்
இடையே நடக்கும் உரையாடல் )

சின்னப்பா ( தன சக கட்சி தலைகள் முன்னே )
இன்று இந்த நீதி என்னை குற்றவாளியாக்கி
சிறையில் அடைக்கலாம்;என் சொத்துக்களை
பறிமுதல் செய்யலாம்;கவலைப்படாதீர்கள்
நண்பர்களே , நாளையே நான் மீண்டும்
ஆட்சிக்கு வருவேன் ஜாகிரதை ; என்னை
இதற்கிடையில் விட்டுக்கொடுக்க நினைத்தால்
எட்டப்பராகி கட்சி மாறினால் அதன் விளைவு
தெரியும் தானே உங்களுக்கு

கிட்டப்பா (இவர் எம்.எல்.எ)
ஐயா , நான் உங்கள் அடிமை இன்றும் என்றுமே
தாங்கள் திரும்பி வந்து ஆட்சியில் அமர்ந்தாள்
என்னை மந்திரியாக்கி விடுவாரா ; உங்கள்
காலடியில் நாய்போல் சுற்றி வருவேனுங்க ..................

சின்னப்பா : டேய் மடைய கிட்டப்பா , அப்படி நாய்போல்
என் காலடியில் கிடைக்க தொண்டர்கள் ஆயிரம்
ஆயிரம் பேர் இருக்காங்க ; இதனால் எனக்கு என்ன
பயன்; என் சொத்து எல்லாம் இப்போ ஜப்தியாகிறதே
இதை நான் மீட்பது மீண்டும் எவ்வாறு ?
டேய் நாளை நீ மந்திரி ஆகணும்னு நினச்சா ,
இப்போதே எனக்கு சொத்து சேர்த்துவைக்க முந்திடு
இதற்காக போறாங்க பாரு உன் முன்னே ஒரு குழுவினர்
அவர்களோடு சேர்த்துக்க ..................................
வீனா உன் அடிமை நான், காலடியில் இருப்பேன் என்றெல்லாம்
சொல்லிண்டு நேரத்தை வீணடிக்காதே ..............

நெக்ஸ்ட் யாரப்பா என்ன பாக்க வந்தது கூப்பிடு (தன
செக்ரெட்டரி ஐ பார்த்து சொல்லறார்)


கிட்டப்பா : சரிங்க ஐயா அப்படியே

( சிறைச்செல்ல சின்னப்பா தயார்; வீட்டு வெளியே ,வாழ்க சின்னப்ப தலைவர்
வளர்க அவர் புகழ்; நீதி ஒரு நாள் கிடைக்கும்; மீண்டும் ஆட்சி எங்கள் கையில்
காத்திருப்போம் அதுவரை.....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Feb-17, 2:19 pm)
பார்வை : 220

மேலே