புது விடியல்
துன்பம் கண்டு துவளாதே
குழந்தை விழும் அழும்
நடை பயிலும் போது ,
ஆனால் அது துவண்டு நிற்கிறதா ?
பின்பு துடிப்போடு நடப்பதில்லையா ?
வாழ்வில் சோதனை வரும்
சொல்லொணா வேதனை வரும்
கலங்காதே நண்பா கலங்காதே
தொய்யாதே நெஞ்சம் நொய்யாதே
கவலையை உன் இடத்தில் வையாதே!
ஒரு வழி மறையும்
ஒரு கரம் முடங்கும்
இருள் சில காலம்
அதுவா பொது மூலம் ?
முயற்சியுடன் முன்னேறு
மனக் காயங்கள் தீரும் ஔடதம்
உன் கண் முன்னே வந்து சேரும் !
ஒளியின் விடியல் ஒருநாள் புலரும்
மகிழ்வும் உன்னில் ஒருநாள் மலரும்
ஒரு வழி மறைந்தால்
பல வழி திறக்கும்
ஒரு கரம் மூடும்
பல கரம் நீளும்
எனவே தோழா !
உயிர்த்தெழு துடித்தெழு
உன்னை அணைக்க வரும்
ஆயிரம் கரங்களை நாடி
உன்னை தழுவ வரும்
புது வசந்தங்களை தேடி !
ஆக்கம்
அஷ்றப் அலி