திருநங்கை வரிகள்

பிறந்தது ஒருமுறை
பிறரால்
இறந்தது பலமுறை...

பள்ளி பருவத்தை கடந்து
பருவ வயதை
எட்டிவிட்டேன்...

எனக்குள் ஏன்
இந்த மாற்றம்

பூவின் வாசங்களால்
கவரப்பட்டேன்
பொட்டு வைக்க துடித்தேன்...

நட்பு வட்டாரத்திலிருந்து
முற்றிலும்
தனிமை படுத்தப்பட்டேன்...

உறவினர்களின்
ஊசிமுனை வார்த்தைகளால்
காயப்படுத்தப்பட்ட நான்

உணர்ச்சிகளை உள்ளடக்கிக்
கொண்டேன்...

இது
எங்கள் தவறில்லை...

பெற்றோர்களே பிள்ளைகளை
வீதிகளில் விட்டு விடாதீர்கள்.!

சிறகுடைந்த பறவைகளாக
பறக்க முயன்றும்
நாங்கள்
சமூகத்தின் சுவற்றிலே
மோதி
விழுந்து கொண்டுதான்
இருக்கிறோம்....

எழுதியவர் : விஜிவிஜயன் (21-Feb-17, 10:45 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : thirunangai varigal
பார்வை : 546

மேலே