சொல்லமுடியவில்லையடா என் வலிகளை-sagi
காதல் வலிகளை
உன்னால் உணர்ந்தேன்....
நீ ஏமாற்றிய
நிமிடமே தென்றலில்
கலந்திருக்க வேண்டும் . ..
வலிகளை சுமக்கும்
என்னிதயம் படும்
துயரங்களை நீ
அறியப்போவதில்லை .....
உன்னோடு முடித்த
என் வாழ்க்கையை
தொடர்ந்தேன் .......
அவ்வாழ்க்கை தரும்
வலிகளில் மடிந்துக்கொண்டே
இருக்கிறேன் .....
வலிகளே என்
வாழ்க்கையானது .....
மரணத்தை மட்டுமே
விரும்புகிறது என்
மனமேனோ .....
மரணமே தயவுசெய்து
என்னை இந்நொடியே
அழைத்துச்செல்ல வா ......