அன்னை தெரசா

​ஈன்றத் தாயளவு இணையாக இவ்வுலகில்
ஈரமுள்ள நெஞ்சாய் வாழ்ந்திட்ட உயிரவர்
ஈடில்லா இதயமாம் அன்னை தெரசாவை
ஈடிதம் புரிந்திடுக உலகோரே என்றென்றும் !

ஈவிரக்கத்தின் உருவம் செய்திட்ட பணியை
ஈடேற்ற இயலாது எவராலும் இவ்வுலகில்
ஈமம் அடையும்வரை மறவாதீர் என்றுமே
ஈகை குணமுடன் வாழ்ந்திடுக வையத்தில் !

( ஈடிதம் = தொழுதல் )
​( ஈமம் = சுடுகாடு ) ​


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Feb-17, 8:28 am)
பார்வை : 2689

மேலே