மலரே மௌனமா மௌனமே வேதமா - தர்பாரி கானடா

அர்ஜுன், ரஞ்சிதா நடித்த கர்ணா (1995) திரைப்படத்தில், கவிஞர் வைரமுத்து இயற்றி, வித்யாசாகர் இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் தர்பாரி கானடா ராகத்தில் பாடிய ஒரு இனிய பாடல் `மலரே மௌனமா மௌனமே வேதமா`.

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா
அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா
.
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
.
மலரே மௌனமா மலர்கள் பேசுமா
.
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்க்கை தந்த வள்ளலே
.
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா
அன்பே
மலரே மௌனமா மௌனமே ம்ம்ம்.. வேதமா

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Feb-17, 11:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 270

சிறந்த கட்டுரைகள்

மேலே