கரம் கோர்ப்பாயடி கருவாச்சியே

இருக்கும்
நிலை மறந்து
இறுக்கும் நிலை
தொடர்ந்து
நீ உனை
கொடுக்கும்
நிலையில்
வெறுக்கும் நிலை
துறந்தேனடி..

தரிசாய்
இருந்தவனுள்
புதிதாய்
அன்பை விதைத்துவிட்டு
முழுதாய்
காதலை
வளர்த்துவிட்டு
பார்வையில்நின்று
கொன்றாயடி
பாதியில் மறந்து
சென்றாயடி...

இதயத்தினுள்
உற்சாகம் கூடி
என்னவளே
நின் அன்பை நாடி
உணர்வுகள்
உன்புகழ்பாடி
வேலை
தேடுகிறேனென்று
உனைதேடி
அலைந்த நாட்களே
அதிகமடி..

ஐயம் நீக்கி
ஐம்புலன் அடக்கி
தடைகளைத்
தாக்கி
உனைநோக்கி
வந்தேனடி
கண்டும்
எனை விலக்கி
கடந்தாயடி
என் வலிகள்
அறிவாயோடி..!!!
என்னுள்ளம்
எனையே கேட்குதடி..

இருவருக்கும்
கடமைகள்
பலவும்
உள்ளதடி
அருவருக்கும்
நிலையில்
நானும் இல்லையடி
நாம்தான் நமக்கு
பொருத்தமடி
இடையில்
எதற்கு வருத்தமடி!?!!
கவலையின்றி
கடமை முடிப்பாயடி
அதுவரையில்
காத்திருப்பேனடி..

இடைவெளி
நமக்குள்
முளைத்தாலும்
இன்னொருத்தி
தேடி மனம்
போகவில்லையடி
நம் காதல்சமவெளி
பள்ளத்தாக்காய்
ஆவதில்லையடி..

தனிமை
சிறையாய்
இல்லையடி
உன் நினைவே
துணையாய்
உள்ளதடி
நம்பிக்கை என்னுள்
உள்ளபடி
நீயும்
பொறுமை காப்பாயடி
என்னுடன்
கரம் கோர்ப்பாயடி...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (5-Mar-17, 7:23 pm)
Tanglish : kaadhal saathi
பார்வை : 120

மேலே