சமுதாயத்தில் வேண்டும் உன் போராட்டம் 555

தோழியே...

காதல் கொண்டாய் காதலனை
மனம் முடித்தாய்...

பூத்து குலுங்கும்
நந்தவனம்...

உன் வாழ்வென்று
நான் மகிழ்ந்திருந்தேன்...

உன்னை படைத்த
இறைவனுக்கு அவசரமோ...

உன்னை தனிமையில்
தவிக்கவிட்டான்...

தந்தை முகம் கண்ட
ஒருமழலை...

தந்தைமுகம் கண்டும்
நினைவில்லா ஒருமழலை...

முட்கள்தான் உன்னை
முத்தமிட்டு கொண்டு இருக்கிறதாம்...

தாமதமாக தெரிந்துகொண்டேனடி
தோழி அயல் நாட்டில் நான்...

சொல்லால் சொல்லிவிடாத
உன் சோகத்தை...

உன் முகத்தின் கண்ணீர்
சுவடுகள் சொல்லுதடி...

கலங்காதே என் தோழி
காலம் இருக்கிறது...

கல்வி அறிவும்
உன்னிடம் இருக்கிறது...

இதுவரை நீ போராடியது
போராட்டமல்ல...

இனி நீ சமுதாயத்தில் போராட
போவதே உண்மையான போராட்டம்...

நான் இருப்பேன் உனக்கு
பின்னால் துணையாக...

சுட்டெரிக்கும் சூரியனும்
உன்னை கண்டு அஞ்சும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Mar-17, 8:20 pm)
பார்வை : 298

மேலே