நதியைப் போல் வாழ்வோம்
நதியைப் போல
வாழக் கற்றுக் கொள்வோம்!
செல்லும் வழியெங்கும்
எத்தனை தடைகள் வந்தாலும்
தகர்த்து தன்னூடே கொண்டு செல்லும்.
இல்லை,
தனக்கான பாதையை மாற்றி
இலக்கை நோக்கி பயணித்து
கடலோடு தான் சங்கமிக்கும்................
தங்க.மணிகண்டன்.................