எழுத்து

உள்ளத்து நினைவுகளை
மலரெனவே கோர்த்துவிட்டால்
எழுத்துக்கள் பூமாலையென‌
நிதம்நிதமும் பிறப்பெடுக்கும்...

உலகில் பலமொழிகளுண்டு
மொழிக்கு தனிஎழுத்துக்களுண்டு
அவரவரின் தாய்மொழிக்கு
அவரெழுத்தே மிகஅழகாகும்

கல்வியைக் கற்கும்வேளை
எழுதவும் கற்றுக்கொண்டோம்
எழுத்துக்கள் புரட்சிசெய்தால்
எழுத்தாளன் மகிழ்ச்சிகொள்வான்

வகைவகை அழகுசேர்த்து
எழுத்துக்கள் எழுதும்போதும்
வகைவகை வண்ணமிழைத்து
எழுத்துக்கள் வடிக்கும்போதும்

வானவில் எழுத்துக்கள்
வாசம்கூட கொடுத்திடுமே
நமைவிட்டு இதழ்தொட்டாலும்
பாசம்கூட கொண்டிடுமே

படிக்காத மழலைக்கூட்டம்
எழுதுகின்ற எழுத்துக்கள்
புரியாது என்றாலும்
அழகாய்த்தான் காட்சிதரும்

எண்ணத்தை எழுத்துக்கள்
சரியாக சேர்த்துவிட்டால்
விண்ணைக்கூட எட்டிவிடும்
ஜகத்தையெல்லாம் வென்றுவிடும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Mar-17, 7:20 pm)
பார்வை : 196

மேலே