ஏனோ
புயல் மழை தாங்கி தழைத்த இலையொன்று
சாரல் துளி பட்டு உதிர்ந்ததும் ஏனோ?
கடும் குளிர் தாங்கித் திரண்ட பனித்துளியொன்று
கதிரவன் கண்டு மறைந்ததும் ஏனோ?
வசந்தத்தில் பூத்த வாசனை மலரொன்று
கோடையில் வாடி கரிந்ததும் ஏனோ?
நேற்றெந்தன் வானில் முழு நிலவொன்று
தேய்பிறையாகித் தொலைந்ததும் ஏனோ?