உனக்கேது இணை உவமை

உனக்கேது இணை உவமை

நீ கண்ணிமைக்கும் நேரம்
நான் உயிர் பிழைக்கும் தருணம்
நீ பார்க்கின்ற நேரம்
மனசு வலியால் நோகும்

வலி என்ற போதும்
சுகம் என்றே தோன்றும்
அந்த சுகம் மீண்டும் வேண்டி
உன்னை மனசு தேடும்

இயல்பாய் பேசும் போதும்
ஏதும் சொல்லா மனசு
நீ பேசி பிரியும்போது
தானாய் துடிக்கும் வயசு

இளமை தனிமை கொடுமை
இனிமை உந்தன் வருகை
நீ நடந்து வரும் கவிதை
உனக்கேது இணை உவமை

எழுதியவர் : ருத்ரன் (13-Mar-17, 6:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 79

மேலே