நட்பு -கங்கைமணி
நங்கூரம் போட்டு உன்னை
நிறுத்திவைப்பதல்ல நட்பு.,
நல்லதை சொல்லி
நகர்த்தி விடுவதே நட்பு .
சேற்றினில் கண்டு
சுற்றிப்போவதல்ல நட்பு.
சேற்றினில் இரங்கி உன்னை
சுத்தம் செய்வதே நட்பு
சீக்கிரம் கடக்க வழியைச்-
சொல்வதல்ல நட்பு
சிக்காமல் உன்னை
ஜெயிக்க வைப்பதே நட்பு .
கருப்பை நிரப்பி
கலங்க வைப்பதல்ல நட்பு
கலக்கமிருந்தும்
காத்துநிற்பதே நட்பு .
தூரம் இருந்தும்
தொலைந்து போகாது நட்பு
பாரம் இறக்க
பரமன் படைப்பே நட்பு
முதுகில் குத்த
மறைந்து நிர்ப்பதல்ல நட்பு
நஞ்சைக் கூட
நம்பிக்குடிப்பதே நட்பு .
வெறுப்பை உமிழ்ந்து
வெட்டிவிடுவதல்ல நட்பு .
குறிப்பை உணர்ந்து
கொட்டிக் கொடுப்பதே நட்பு
இலாபத்தில் பங்கு
இதுவென கேட்காது நட்பு
இலாபமே நீ என
நன்றியுரைப்பதே நட்பு .
மொத்தத்தில்...
அன்பு நிறைந்த ஒரு
ஆனந்த பாத்திரம் நட்பு!
-கங்கைமணி