உலக கவிதைதினம் இன்று

அன்பு கவிதை அம்மாவில் எழுதி
ஆசை கவிதை ஆன்மாவில் எழுதினான்
அறிவு கவிதை ஆசானில் எழுதி
அழகு கவிதை பசுமையில் எழுதினான்
மென்மை கவிதை நிலவில் எழுதி
மேன்மை கவிதை வானில் எழுதினான்
சுவை கவிதை கனியில் எழுதி
சுடும் கவிதை சுடரில் எழுதினான்
சுருட்டும் கவிதை காற்றில் எழுதி
சுத்த கவிதை முலைபாலில் எழுதினான்
மணக்கும் கவிதை மலரில் எழுதி
மானத்தின் கவிதை கற்பில் எழுதினான்
இனிக்கும் கவிதை தேனில் எழுதி
குளிர்ச்சி கவிதை மழையில் எழுதினான்
கூசும் கவிதை மின்னலில் எழுதி
பேசும் கவிதை கன்னியில் எழுதினான்
அதிரும் கவிதை இடியில் எழுதி
அமைதி கவிதை தென்றலில் எழுதினான்
வீரக்கவிதை மீசையில் எழுதி
சோகக்கவிதை விழிநீரில் எழுதினான்
உறவு கவிதை தொப்புளில் எழுதி
உறங்கும் கவிதை இரவினில் எழுதினான்
உணரும் கவிதை உதயத்தில் எழுதி
உயர்ந்த கவிதை மலையில் எழுதினான்
உப்பு கவிதை கடலில் எழுதி
நடன கவிதை நதியில் எழுதினான்
சிரிப்பு கவிதை மழலையில் எழுதி
சிந்தை கவிதை சிரசில் எழுதினான்
இசை கவிதை குரலில் எழுதி
அசையும் கவிதை அலையில் எழுதினான்
அற்புத கவிதை பிறப்பில் எழுதி
அறியா கவிதை இறப்பில் எழுதினான்..

இறைவா...
உன்கவிதை இத்தனை இருந்தும்
கவலை கவிதை என்கையில்
மடித்து யாரும் காணா
அனுப்பியது ஏனோ..?

இன்று உலக கவிதைதினம்
எழுத்து தள கவிஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

குமரி பையன்
(மீள்பதிவு)

எழுதியவர் : குமரி பையன் (21-Mar-17, 1:17 pm)
பார்வை : 212

மேலே