வாழ்க்கை
அமைதியாக நகர்கிறது இந்த நதி நீர்,
தேங்கிய குட்டையாகி அசுத்தமாகாமல் இருக்க....
அமைதியாக நகர்கிறது இந்த வாழ்க்கை,
குழப்பமில்லாத அந்த நதி நீரைப் போல்...
வரையப்படாத ஓவியங்கள்...
எழுதப்படாத காவியங்கள்...
போதிக்கப்படாத படிப்பினைகள்....
இந்த வாழ்க்கை தான் வாரி வழங்குகிறது நித்தமும் வரப்பிரசாதமாய்....
தேடிச் சென்றால் ஓடிவிடுதலும்,
மறைந்து விடுதலும்,
மறைந்துவிட்டால் தேடி வருதலும் இந்த வாழ்க்கை தரும் சுவராஸ்சியங்கள்....
வளர்தலும், தேய்தலும்,
திடப்படுதலும், நோய்தலும் ஒரு தொடர்ச்சியாய்,
பள்ளம் கண்டு குதித்தோடு இந்த நதி நீர் போல்,
சிறப்பாய் ஓடுகிறது இந்த வாழ்க்கைப் பயணம்....
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்...
எண்ணிப் பார்க்கவே ஆசை தான்..
எண்ணித் தான் நாமும் எத்தனை என்று கூற இயலுமா???..
நட்சத்திரங்களும், மனிதர்களின் ஆசைகளும் ஒன்னு..
அதை எண்ணிப் பார்த்து நிறைவேற்ற எண்ணினாலோ, கடைசியில் ஆயிடுவோம் ஒன்னுமில்லா மண்ணு..
பூத்துப் பூத்துக் குலுங்குகின்றன பூக்கள், உதிரப் போகின்றோமென்ற கவலை சிறிதுமின்றி...
மகிழ்ச்சி தான்...
எப்போதும் மகிழ்ச்சி தான்...
போதுமென்ற மனமே நிம்மதி தரும் அருமருந்து தான்....
விழிப்புணர்வு கொண்டால்....