கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாடு

கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாடு!

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்,
கவி பாடும் என்பது போல்,
பாண்டிய நாட்டு பாத்ரூமிலும்,
முத்துக்கள் சிதறுகின்றனவோ, என வியந்து,
எடுக்கவோ, கோர்க்கவோ, என ஆராய்ந்தேன்!
முடிவு-
அது, சிப்பிக்குள் முத்தல்ல,
கோடைக்கால தண்ணீர், தட்டுப்பாட்டை நிரூபிக்க,
குழாய் விடும் கண்ணீர் முத்துக்கள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 1:10 am)
பார்வை : 73

மேலே