நான்

மிகவும் கோபக்காரி நான் .....
அதே போல் காரணம் இன்றி வேண்டுமென்றே கோபம் வராது .....

அதிகமாகவும் பேச மாட்டேன்
குறைவாகவும் பேச மாட்டேன்
எனக்கென்று ஓர் அளவுண்டு
அதில் வழுவாமல் நிற்பேன்

மகிழ்ச்சியையும் துக்கத்தையும்
சமமாகவே எடுத்துக்கொள்வேன்
எந்த நிலையிலும் நான் நானாகவே இருப்பேன்
யாருக்காகவும் என் அடையாளத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்

அதிகம் இசை கேட்பேன்
மிகவும் மோசமாக எப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பேன்
பயணம் போக மிகப்பிடிக்கும்
சன்னல் ஓரத்தில் அமர்ந்து இயற்கையை பார்த்து ரசிப்பேன்
காடு மலை அருவி எல்லாம் சென்று
மரம் செடி கொடி காய் கனிகளோடு மயில் கிளி குயில்களோடு
மனித காலடி தடமே இல்லாத இடத்தில்
குடில் போட்டு இயற்கையோடு இசையோடு வாழ பிடிக்கும்

தமிழ் என் தாய்
என் தாய் என் உயிருக்கும் மேலானவள்
கணிதம் பிடிக்கும்
கணிதம் எங்கும் நிறைந்தது

யாரையும் எளிதில் நம்ப மாட்டேன்
நட்பின் மீது எளிதில் சந்தேகப் படமாட்டேன்

பெரிய பொய் சொல்ல மாட்டேன்
சொன்னால் எல்லோருக்கும் நல்லது பயக்கும் என்பதற்காக பொய் சொல்லுவேன் .....
சின்ன சின்ன பொய் சொல்லுவேன்.
பொய் சொன்னால் என் முகமே காட்டிக்கொடுத்து விடும் .....
பொய் சொல்லுவது சுத்தமாக பிடிக்காது...
எனக்கு வாய்ப்புகளில் வாழ பிடிக்காது .....
வாய்ப்பே இல்லாமல் வாழவே பிடிக்கும் ......

யாரையும் ஏமாற்ற மாட்டேன் .....
யாரையும் அழ வைக்க மாட்டேன் .....
எந்த பொருளுக்கும் ஆசை பட மாட்டேன் .....

கலாச்சாராத்தோடு தான் வாழ்வேன் ......
பண்பாட்டை விட்டுத் தர மாட்டேன் .....

மனிதர்களை மதிக்கிறேன் .....
இயற்கையே இறைவன் .....
இசையே உயிர் துடிப்பு .....
தமிழ் என் உயிராகும்
பெண்ணியத்தை மதிக்கிறேன்.....
பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் .....
தமிழச்சி என்று சொல்ல பெருமை படுகிறேன் .....
எந்தன் தாய் தந்தையின் சொல்லை எந்நாளும் காப்பேன்.....
கொடுத்த வாக்கை உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவேன் .....

உழைத்து வாழ்வேன்
வெட்டிக்கதை பேச மாட்டேன்
பம்மாத்து பண்ண மாட்டேன்
அதிக ஒப்பனை செய்து கொள்ள மாட்டேன்
தமிழ் பெண் எப்படி இருப்பாளோ அப்படியே இருப்பேன்
தவறை கண்டால் ரௌத்திரம் வரும்
எதையும் வெளிப்படையாக பேசிவிடுவேன்
அகம் ஒன்று புறம் ஒன்று என்னிடம் இல்லை
உண்மையை மறைக்க மாட்டேன்
யாருக்கும் அஞ்ச மாட்டேன்
பணத்திற்கு என் தலை சாயாது
நீதிக்கு(உண்மைக்கு) தலை வணங்குவேன்
ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளவே மாட்டேன்
எந்நிலையிலும் நான் நானாக இருப்பேன்

எதற்கும் புற முதுகிட்டு ஓட மாட்டேன்
எதிர்த்து நேருக்கு நேர் நின்று நேர்மையாக போராடி
நேர்மையாக வெல்வேன்
சாகும் பொழுதும் என் நேர்மையை விட மாட்டேன்

உயிர்கள் அனைத்திற்கும் உண்மையாக இருப்பேன்
தமிழில் தான் பேசுவேன்
இயற்கையோடு தான் இசையோடு தான் வாழ்வேன்
உண்மையாகத் தான் வாழ்வேன்
எதற்கும் பயப் பட மாட்டேன்
இறப்பென்பது எப்பொழுது வேண்டுமானாலும் வரட்டும்
ஏன் என்றால் நான் யாரையும் வஞ்சித்ததில்லை
எனக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் கிடையாது
இறப்பை பற்றிய பயமும் கிடையாது
சொல்ல வேண்டுமென்றால்
எனக்கு இந்த பிறவியே போதும்
அடுத்த பிறவி வேண்டாம்
கடவுளின் படைப்பில்
என் தாய் தமிழோடு
பசுமை போர்த்திய இயற்கையோடு
தேன் சிந்தும் இசையோடு
உண்மையோடு வாழ்ந்து விட்டேன்

இறையே .....
உன்னையன்றி வேறொருவரை மனதால் கூட நினைத்ததில்லை
நான் உனக்கே உனக்கானவள்
சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் நட்பிற்கும் உறவுகளுக்கும் எல்லா உயிர்களுக்கும் உண்மையாக என்னொடியும் வாழ்வேன்
என் தாய் தந்தை தாரை வார்க்க
என் கரம் பிடிக்கப் போகும் இறையே
உன்னையன்றி வேறொன்றும் எனக்கு பெரிதில்லை
உன் எண்ணங்களை மதிப்பேன்
உன் சோகங்களை தாங்குவேன்
எல்லா சூழ்நிலைகளிலும் உன்னுடன் இருப்பேன்
உன் கண்ணீரை துடைப்பேன்
உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டேன்
உன்னை தாக்க வரும் ஆயுதத்தை நான் தாங்கிக்கொள்வேன்
உன்னை அழிக்க நினைப்பவர்களை
நான் அழிப்பேன்

நான் நானாக இருப்பேன்
நீ நீயாக இருப்பாய்
நாம் நாமாக வாழ்வோம்
வாழ்வின் எல்லா இன்ப துன்பங்களையும் எல்லாவற்றையும் பகிர்ந்து வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோம்
இருவரும் இணைந்திருக்கும் பொழுது துன்பம் கூட துன்பமாகாது
எல்லாமே நமக்கு ஒன்று தான்
எந்த நொடியும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம்
இறக்கும் பொழுதும் நாம் ஒன்றாகவே விண்ணுலகம் செல்வோம்
உன் மடியில் நீ அறியாமலேயே
உனக்கு ஒரு நொடி முன்பே நான் இறந்திருப்பேன்.....
என் மார்பில் எப்பொழுதும் உன்னை நான் சுமப்பேன் ......

நம் உயிர்களை நாம் நன்றாக வளர்ப்போம் .....
நல்ல மனிதர்களாக உருவாக்குவோம்.....
அவர்கள் பாதைக்கு ஒளியாவோம்.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Mar-17, 9:45 am)
Tanglish : naan
பார்வை : 1099

மேலே