சாமிக்கு தெரியாதா என்ன

கொள்ளையடித்து சேர்ப்பான்
கொள்கை ஏதுமின்றி
கொடிகட்டி பறப்பான்—பிறருக்கு
கொடுக்க மனமின்றி
குவித்து வைப்பவனுக்குத் தான்
கொட்டி கொடுப்பான் இறைவன்

உண்ண உணவின்றி
உயிர் வாழும் ஏழைக்கு
உதவுவதுபோல் தெய்வம்
குறையேதுமின்றி, குறையாமல்
நிறைய கொடுத்திடுவான்
நிகரில்லா பிள்ளை செல்வம்

இந்திய தேசத்தில்
இரண்டும் உச்சம் தான்,
எதிலும் சேராத பாரதம்
எப்போதும் நடுநிலைதான்
சமநிலையைக் காக்க
சாமிக்கு தெரியாதா என்ன?

எழுதியவர் : கோ. கணபதி. (27-Mar-17, 5:34 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 43

மேலே