உள்ளிருந்து ஓர் குரல்

இது ஆத்மாவின் அங்கலாய்ப்பு..
விலகிவிட நினைத்தேன்
வழி விட மறுத்தது வாழ்க்கையும் வயதும்...
ஏற்றுக்கொண்டேன் .....
மறுமுறை விட்டுவிடு என்றது வாழ்க்கை
மறுத்தேன் ...
ஏளனமாய் என்னை நோக்கிச் சிரித்தது என் வாழ்க்கை
உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தக் குமுறல்......
வலி தாளாது கதறியது வயது...
விதி தன் விகாரமுகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது...
வாயடைத்து நின்றேன்..
உயிருள்ள வரை ஒருவன் என்ற கோட்பாடு உயிரோடு நசுங்கியது....
மௌனமாய் உணர்வுகள் மரணிக்க
காலச் சுழலில் சிக்குண்டு
தடுமாறி ..தடம் மாறி
இன்று. நான் ....
காலமே நீ பதில் கூறு நான் செய்த தவறுதான் என்ன.???

எழுதியவர் : கவியாழினி (12-Apr-17, 8:39 pm)
சேர்த்தது : கவியாழினி
பார்வை : 143

மேலே