இரவின் மடியில்

இருளின் இறுக்கத்தில்
இதயங்கள் இடமாற்றம்
விழிகளின் பரிமாற்றம்
மொழியின் தடுமாற்றம் !

பொங்கிடும் உணர்வுகள்
தேங்கிடும் உள்ளத்தில்
எழுந்திடும் மோகத்தால்
வீழ்ந்திடும் நெஞ்சங்கள்
விழுந்திடும் காதலில் !

இரவின் மடியில்
இசைக்கும் தாலாட்டு
இணைக்கும் மனங்களை !
அணைந்த ஒளியில்
அணைக்கத் துடிக்கும்
அன்பின் பெருக்கால்
ஆற்றிட விரைந்திடும்
ஆறாத காதல் தீயை !

ஆய்ந்திட வேண்டாம்
சாய்ந்திடும் மனங்களை
வேய்ந்திடும் உணர்வுகளால்
உருவாகும் காதல்கூடு
உறுதிபட நிலைத்தால்
இறுதிவரை இன்பம்தானே..!


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Apr-17, 3:32 pm)
Tanglish : iravin madiyil
பார்வை : 689

மேலே