இரக்கமில்லா காதலி
அடிமேல் அடி வாங்கும்
கல்லும் கூட
ஒரு சமயம்
அதன் வடிவத்தை
மாற்றி கொள்ளும் ,,,
என் மனமோ
மௌனம் சுமக்கிறது
மாற வழி தெரியாமல் ,,,,,
சொல்லி கொடேன்
உன் நினைவுகளை
பரிசு பொருளென
பாதுகாக்கும்
அதனிடம் ,,,,
சிறு பிள்ளையென
அழுது
அடம்பிடிக்கும்
அதனிடம்
எப்படி சொல்லி
புரிய வைக்க ,,,,
முடியவில்லை பெண்ணே
முடியாமல் தான்
நானும்
தவிக்கிறேன்
உன்னிடம்
என்னை தொலைத்து விட்டு ,,,,!