தெரிந்துகொள்

சிறகை விரித்தது பறவை,
சின்னதாகிப்போனது வானம்..

உழைப்பு எழுதிய கவிதை,
உயரம் தாண்டுது வனப்பு..

துணிச்சல் போட்ட பாதை,
துச்சமானது தூரம்..

இயற்கை எழுதிய கவிதை,
இன்னும் வனப்பானது வையம்..

தெரிந்துகொள் மனிதா,
தேவைப்படுகிறது உனக்கு-
பறவையின் திறமை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-17, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : therinthukol
பார்வை : 151

மேலே