சிவம்
அருள் பெற வேண்டி சாதானா
குருவின் பார்வையால் நமக்கு
கிடைத்தது
சிவனின் பார்வைக்கே சிவத்தில்
உறுதியான தேடல் பிறந்தது
சிவனை நெஞ்சில் சுமந்தது
சித்தமும் இங்கே பயந்தது
குருவின் அருள்
என்னுள் சென்றது
நோய்கள் என்னுள் பறந்தது
நாடிகள் என் சொல் கேட்டது
நாட்கள் நடைகள் போட்டது..
வெள்ளயங்கிரியை
என் கால்கள் தொட்டது
குருவின் குரல்
எனக்குள் கேட்டது
ஒரு கை இறுக என்னை பிடித்தது
மலையில் ஏற்றி சென்றது
களைப்பை அதுவே பெற்றது..
வியப்பை என்னுள் விதைத்தது
மேகம் என்னை தீண்டுது
சிவனை நானும் கண்டது
என் நெஞ்சம் அதிலே கரைந்தது
சிவமும் என்னுள் மலர்ந்தது..