தென்றலே மெல்ல வீசாயோ

தென்றலே தனிமை கொண்டு ஒதுங்கிவிட்டால்
பூக்கள் எல்லாம் மலர்ந்திட என்ன செய்யும் ?
நதிகள் எல்லாம் அலையின்றி
எழுதி வைத்த சித்திரம் போல் ஆகிவிடாதா ?
சாளரத் திரைகூட ஆடாது நின்று விடுமே !
வசந்தமெனும் காலமும் வரவேற்பின்றி திரும்பிவிடுமே !
கலைந்தாடும் இவள் கூந்தலும் உன் துணையின்றி தவித்திடுமே !
நீரின்றி அமையா உலகில் நீயின்றி அமையுமோ இந்த எழிலெல்லாம் ?
ஆதலினால் தென்றலே மெல்ல வீசாயோ ?

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-17, 9:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே