மழைக்கோர் வேள்வி நடத்தலாமே

காவேரி நீர்ப் பாயும் நஞ்செய் நிலங்கள்
நீரின்றி களை இழந்து பாலை போல் காட்சி
மழைக்காய் ஏங்கும் உழவர் குடி மக்கள்
எதை விதைக்க எதை விளைவிக்க என்று
புரியாமல் இப்படியே போனால் நாளை
என்னாகும்? நம்மையும் நம் குடும்பத்தையும்
யார் காப்பார்? என்ற பயத்தால் அதிர்ந்திருக்க
உழுதலையும் உழவரையும் நம்பி உணவுக்கு
நாம் என்பதை நாம் மறந்தோமா? பின்
ஏன் நாம் உழவர்க்காய்,, நமக்காய், நம்
நாட்டிற்க்காய் என் ஒரு கூட்டு தொழுகை
மழைக்காய் இன்னும் நடத்தவில்லை?
விரைவோமா அவரவர் கிராமத்தில்
பட்டணத்தில், நகரத்தில் இன்றே
மழை வேண்டி கூட்டு தொழுகை அந்த
ஆண்டவனை வேண்டி செய்வோமா ?
வாருங்கள் சேருங்கள் இந்த மழை வேள்வி
நடத்திடுவோம் இதற்க்கு அவிசு
நம் கூட்டு தொழுகையே என்று அறிந்திடுவீர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Apr-17, 12:05 pm)
பார்வை : 73

மேலே