சிறகுகள்

புத்தக சுமை தாங்கமுடிவதில்லை
வீட்டுப் பாடம் எழுத தீரவில்லை
மைதானத்தில் விளையாட நேரமில்லை
பாட்டியிடம் கதை கேட்க விடுவதில்லை
தோழர்களோடு சுற்றித்திரிய சாத்தியமில்லை
உணவை அள்ளித் திணிக்கும் அன்னையிடம் கொஞ்சலில்லை
ஓடி உழைக்கும் தந்தையிடம் நெருங்கமுடிவதில்லை
அத்தனையும் இறுக்குகின்றன என்னை.....
கற்பனையிலாவது சுதந்திரமாக
சிறகை விரித்து பறக்க முடியுமாயென்று
கண்ணை மூடி வேண்டுகின்றேன்
' எனக்கு சிறகுகள் தா இறைவா ' என்று.....

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Apr-17, 11:26 am)
Tanglish : siragukal
பார்வை : 137

மேலே