தொலையாத உணர்வுகள்
~~தொட்டுவிடும் தூரம்
என்று தெரிந்திருந்தும்
விட்டு விட மனமில்லாமல்
உன்னையே
சுற்றி சுற்றி வரும்
எந்தன்
காதல் கலவரங்கள்!~~
~~இனியும்
தாங்காது
என் மனம்...
நீ விட்டுச் சென்ற
எனது உயிரைத் தொட்டுச் சென்ற
உனது
கடைசிப் பார்வையின்
பேசிப்போன மௌனங்கள்!~~
~~நீ வாசித்த
நம் காதல் இசையோ...
இன்று
இடம் மாறி...
ஏனோ
இதயம்
தடுமாறித்தான் போகிறது!~~
~~போதும்...போதும்...
உனது
சல்லடைக் கண்களால்
என் முகவரி
தொலைத்தேன்...
உனது
வெட்கத்தால்
முழுவதும் தொலைந்தேன்!~~