நீர் வற்றிய குளம்
பெரியோர்களுக்கு
நடைபயிற்சி பயிலவும்
பிள்ளைகளுக்கு
கிரிக்கெட் ஆடவும்
தாத்தா பாட்டிகளின்
பஞ்சாயத்து அரங்கேற்றவும்
காக்கா குருவிகளின்
ரீங்கார சந்தையாகவும்
காளையர்களின்
கபடிக் கூடமாகவும்
மங்கையரின்
பாண்டி ஆட்டக்களமாகவும்
அம்மாவுக்கு
வறட்டி காயும் இடமாகவும்
சலைவைத் தொழிலாளிக்கு
துணி உலர்த்தும் தளமாகவும்
மாறிப் போனது
நீர் வற்றிய குளங்கள்