மரத்தின் குமுறல்கள்
மரமேமரமே நகராமரமே மனிதரை ஒப்பிட்டு
'மரம்போல நிற்காதே' வைகிறார் சினமிலையோ!
அறமற்ற செயலேதும் செய்ததுண்டா நாங்கள்
அடுத்தவரை என்றும் கெடுத்ததுண்டா சொல்வீர்!
கரம்பல கிளையென நீட்டிகரி மிலவாயுவை
உயிர்காற்று ஆக்கும் செயல்நீர் செய்வீரோ!
மரம்சும்மா நிற்காது சுயமாய் இயங்கும்
மனிதாநீ உன்னோடு ஒப்பிடாதே அவமானம்!