ஏக்கம் தரும் ஏந்திழையாள்

ஏக்கம் தரும்
ஏந்திழையாள் !
~~~~~~ 💜 ~~~~~~
மேனிநிறம் பார்த்தேன்
மேனகையே உன்னை
மிளிர்கின்ற செவ்வானம்
என்றே சொல்வேன் !

காணி நிலம்
எதனை நோக்கும்
வானில் மேவும்
கருமேகவரவு நோக்கும் !

முப்பாலின் மூன்றாம்பாலை
தப்பாமல் தருகின்ற
கருமேகக் கரம்போல
கண்மணியே உனைநோக்கும்

பனிவிழிகள் எந்நாளும்
பார்க்கும் பரிதவிக்கும்
ஏக்கம் கொள்ளும்
நோக்காக்கால் காயும் !

எழுதியவர் : தமிழ்மாமணி புலவர் வெ.அனந் (18-May-17, 3:45 pm)
பார்வை : 123

மேலே