முத்துக்கமலம் இணைய இதழில் வெளிவந்த கவிதை---
..
தங்கம் வெள்ளியாய்...
தங்கத்தின் தேவையினால்,
தள்ளிப்போனது
திருமணம்..
வெள்ளிக் கம்பிகள்
வெளியேறுகின்றன இப்போது,
தலையில்..
நிலைக்கண்ணாடி முன்
தலை சீவுகிறாள்,
முதிர்கன்னி...!
நன்றியுடன்,
-செண்பக ஜெகதீசன்