காதோடுதான் நான் பேசுவேன் -- காதல் கவிதை

காதோடுதான் நான் பேசுவேன் -- காதல் கவிதை


காதோடு தான் நான் பேசுவேன் .
காதலினால் கண் மயங்கினேன் .
நினைவெல்லாம் நீ தானே !
எங்கே தான் போனாயோ சொல்லாமலே !
நீயின்றி நானும் இல்லாமலே !
என்னதான் செய்வதோ புரியவில்லை !


இப்போதெல்லாம் நீ பேசாமல்
விட்டுவிட்டால் என்னை விடக்
கவலைப் படுகிறது நீ
வாங்கித் தந்த கைபேசி !!!


உன் நினைவலைகளில் நான்
என்னைத் தொலைத்தேன் !
கொல்லாமல் கொல்லுகின்றாய் என் தேவி !!
காற்றும் பூவும் உன்னைப் போல இருக்க ...
தினம் என்னை நானே வெறுக்க ...
ஏனோ முடியவில்லை உன்னை மறக்க !!


உறங்க நினைக்கிறேன் ! உறங்க முடியவில்லை
இமைகள் மூடியும் நீ கனவுகளில்
வேராகித் தீண்டுகின்றாய் என்னை .!
கவிதைகளின் விதையாகி நிற்கின்றாய்
என்னருகில் தேவதையே !
அறிவாயோ என் நிலையை !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-May-17, 8:14 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 237

மேலே