பொறியாளனின் புலம்பல்

இரவின் தென்றலை சுவாசித்து!
நட்சத்திர பூக்கள்
தெளித்து வைத்த
வான மெத்தையில்
மேக போர்வையை உதறி விட்டு
உறக்கமின்றி புரண்டு படுத்து உலா வரும் நிலவே
இந்த வேலையில்லா ஏழையவனின் சோகம் உன்னையும் பாதித்து விட்டதோ.....
இரவின் இளவரசியாகியே நிலவே
உறக்கம் தவிர்த்து தவிக்கும்
என் வேதனையை பகிர்ந்து கொள்ளவே
விடிய விடிய விழித்திருக்கிறாயோ என்னுடன்........

எழுதியவர் : பா.அழகு துரை (20-May-17, 10:30 pm)
சேர்த்தது : பாஅழகுதுரை
பார்வை : 114

மேலே