என் சோகம் கண்டு நீ வருந்தாதே 555

என்னுயிரே...

நீ என்மீது அன்று எந்தளவுக்கு
பாசம் வைத்தாயோ...

அதே போல் என்மீது
கோபமும் கொள்கிறாய்...

அன்றும் உன்னை ரசித்தேன்
இன்றும் உன்னை ரசிக்கிறேன்...

என்னை விட்டு
நீ விலகி செல்லவும்...

நீ என்னோடு சண்டை போடுவதர்க்கும்
உனக்கு உரிமை உண்டு...

உன் நிரந்தர பிரிவு
எனக்கு வலிதான்...

என் சோகத்திற்காக
நீ வருந்தாதே...

இன்றுபோல் நாளையும்
உன்னை தேடி வருவேன்...

என்னை ஏற்றுக்கொள்ள
சொல்லமாட்டேன்...

தொலைவில் இருந்து
உன்னை ரசிப்பேன்...

உன் கண்களில் படாமல்
எங்கோ நான்...

என் தாயாருக்கு
வலிகொடுத்தேன் பிறக்கும் போது...

இன்று நீ
எனக்கு கொடுத்துவிட்டாய்...

என் அன்னையையும்
உன்னையும்...

என்றும் நான் மறக்க
போவதில்லை என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-May-17, 8:30 pm)
பார்வை : 1279

மேலே