உணராமல்

பலம் என்று உணர்ந்துவிட்டால்
நிஜம் மறந்து போகுமடா

திடம் என்று எண்ணிவிட்டால்
தடை மறந்து போகுமடா

வீரம் என்று முழங்கிவிட்டால்
வானம் சிறியது ஆகு‌மடா

கர்வம் சிறிதொன்று முகர்ந்துவிட்டால்
அகம் சரிந்து சேருமடா

பாரம் விதையொன்று தோன்றிவிட்டால்
பாலம் பலமடைய நேருமடா

காரச் சுவையொன்றை தொட்டுவிட்டால்
உமிழம் கறைந்து சாகுமடா

காலம் சிறிதென்று சிதறிவிட்டால்
நேரம் கறைந்து காட்டுமடா


-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (27-May-17, 6:17 pm)
பார்வை : 172

மேலே