நகைச்சுவை- மிருகவதை தடுப்பு,எதிர்ப்பு -சிரிக்க,சிந்திக்க

சோமு : ஐயா , ராமு ஐயா , இப்ப எல்லாம்
பேப்பர்ல கால் நடை வதையைப்பத்தி
நிறையா நியூஸ் வருதுங்க அதுல
ஒரு நியூஸ் என்ன திகைக்க வெச்சுதுங்க
ஒருத்தர் சொல்லறாரு அரசாங்கத்தை
எதுத்து எங்கேயோ நட்ட நடு தெருவுல
ஒரு கன்னுகுட்டி கதற கதற வெட்டி , அங்கேயே
அதன் மாமிசத்தை சமைத்து பரிமாறினதா........

இதுக்கு ஒருத்தர் சொல்லறாரு " கொலை
(மிருகம்)செய்வதிலும் மனிதாபிமானத்தோடு
செய்யவேண்டும்..!!!!!!!!!!!!!!!!!!!........................."

இதுக்கெல்லாம் நீங்க என்ன சொல்லறீங்க ?




ராமு : டேய் சோமு இதுல சொல்லறத்துக்கு என்ன இருக்கு
வதை செய்வது தவறு ............அது விலங்கானாலும் சரி
மனிதனாயினும் சரி ............கொலை கொலைதான் ......
அதில் மனிதாபிமான கொலை எனக்கு புரியலையே ?

சோமு : ஐயா இன்றுமுதல் நான் முட்டை கூட சாப்பிடமாட்டேன்
ஐயா ................நான் இனி முழு வெஜ் ................

ராமு: அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை -இது
வள்ளலார் அருள்வாக்கு நினைவுக்கு வந்தது.............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-17, 8:17 am)
பார்வை : 227

மேலே